(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும் (2018/11/22)
சம்மாந்துறை பிரதேச செயலக ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் பங்களிப்புடன் பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும் இன்று 2018-11-22 ம் திகதி தாருள் ஹசனாத் கலா பீடத்தில் நடை பெற்றது. இதன் போது சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜனாப். MM. ஆசிக், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜனாப். பெரோஸ் , சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் தலைவர் ஜனாப். காமில் இம்டாட், செயலார் இஷாக், அனர்த்த […]
சம்மாந்துறை பிரதேச சபை 2018
2018 உள்ளூராட்சி சபை தேர்தல் – 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் சுருக்கம் கீழே உள்ள அட்டவணையில் காணப்படுகிறது.
முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

