சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள் இன்று 24.07.2021 ஆரம்பிக்கப்படுகின்றது.. இன்றைய தினம்.., ஆசிரியர்களுக்கு அல் மர்ஜான் கல்லூரியிலும்.. 60 வயதுக்கு மேற்பட்டோர், பாலூட்டும்+கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும்.. 30 வயதுக்கு மேற்பட்டோர், முப்படையினர், இதர அரச உத்தியோகத்தர்களுக்கு நகர மண்டபத்திலும் .. COVID வக்சின் ஏற்றப்படும் என சம்மாந்துறை MOH அறிவித்துள்ளது.
News
மருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்
பொதுவாக மருத்துவ துறையில் special முடிப்பவர்களை MD பட்டம் கிடைத்ததாக சொல்வார்கள். சம்மாந்துறையில் நான் அறிந்து முதலாவது MD முடித்தவர் Dr M.S. Ibra Lebbe (Consultant Community Physician), அதன் பின்னர் பலர் Eg: Dr. Faseena ( MD in Paediatrics – Consultant paediatrician) Dr. I.L.M.Safeer ( MD in Paediatrics – Consultant paediatrician & community paediatrics) Dr. Asfir (MD in Critical Care Medicine) Dr. […]
சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு
COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும். சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !! முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று […]
முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது. நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால […]
சம்மாந்துறையில் இன்று
இன்று 20.03.2020 மாலை 06 மணிமுதல் திங்கட்கிழமை (23) காலை 06 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளில் அலை மோதினர். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள்.
சம்மாந்துறை சுதந்திர தின கொண்டாட்டம்
72வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று 04.02.2020 சம்மாந்துறை பிரதேச சபை, சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் கலை கலாச்சார அமைப்புக்கள் போன்ற வற்றின் ஏற்பாட்டில் அப்துல் மஜீத் மண்டபத்தில் நடை பெற்றது. இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் , அதன் உறுப்பினர்கள் , ஊழியர்கள் சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் A.J. காமில் இம்டாட் , அதன் உறுப்பினர்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் […]
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை சான்றிதழ் வளங்கும் நிகழ்வு 2019
சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்த முதலுதவி பயிற்சிப் பட்டறை கடந்த [03.11.2019] நடைபெற்றது, இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. இன்று 19.11.2019 செவ்வாய் கிழமை. பி.ப 03:45 மணிக்கு சம்மாந்துறை GAFSO காரியாலயத்தில் இடம்பெற்றது. சம்மேளன சுகாதார பிரிவின் தலைவர் வைத்தியர் ILM. ரிஸ்வான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார பிரிவு செயலாளர் AMM. அஸ்கி அவர்ளின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விரிந்தினராக சம்மேழன தலைவர் […]
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019
எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப் பட்டறை.சம்மாந்துறை தாருல் ஹஸனாத் கலாசாலையில் (சின்னப்பள்ளி மதரஸா), மிக விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்தியத்தில் இருந்து சுமார் 130 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm இந்நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகளின் சம்மேளன சுகாதார பிரிவின் செயலாளர் AMM. அஸ்கி அவர்களுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வளவாளராக சம்மேளன சுகாதார பிரிவு […]