News

சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு

COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும்.

சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !!

முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று (23.03.2020) நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எம் ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பதஹ் பள்ளிவாசலில் வைத்து இந்நிகழ்வு காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச பொது சுகாதார அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸிலிருந்து நாம் எவ்வாறு எம்மை பாதுகாத்து கொள்வது என்பது தொடர்பில் பரிசோதனை ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் அமைப்பினால் ஒவ்வொரு வீடுகளின் முற்றத்திலும் சவர்க்காரம் வைக்கும் தட்டம் பொருத்தப்பட்டதுடன், சவர்க்காரமும் வைக்கப்பட்டு சுகாதாரமான முறையில் கை கழுவுவது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

KI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *