(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சம்மாந்துறை சுதந்திர தின கொண்டாட்டம்
72வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று 04.02.2020 சம்மாந்துறை பிரதேச சபை, சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் கலை கலாச்சார அமைப்புக்கள் போன்ற வற்றின் ஏற்பாட்டில் அப்துல் மஜீத் மண்டபத்தில் நடை பெற்றது. இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் , அதன் உறுப்பினர்கள் , ஊழியர்கள் சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் A.J. காமில் இம்டாட் , அதன் உறுப்பினர்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் […]
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
