(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சம்மாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம்
பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தீர்மானித்துள்ளது. எனவே சமூக உணர்வுள்ள அனைத்து மக்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் சகல சமூக சேவை அமைப்புக்களும் உங்களது கண்டன பதாதைகளை கொண்டு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சகல அமைப்புக்களும் உங்களது கண்டன அறிக்கையினை அன்றைய தினம் […]
உலர் உணவு பொருட்கள் வழங்கல்
சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்று 2018.05.18 ம் திகதி ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் (பொதிகள்) வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் பாலிப்பானாக… ஆமீன் .
புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை
புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை எனும் தொனிப்பொருளில் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊரில் உள்ள ஏனைய அமைப்புகள் இணைந்து இன்று 2018.07.28ம் திகதி மாபெரும் பேரணி நடைபெற்றது.

