(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரம்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 11ம் திகதி உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் முஸ்லீம் மாணவி ஒ௫வர் பர்தாவுக்குள் புளூ டூத் ஹேன் செட்டை மறைத்து வைத்துக் கொண்டு பரீட்சை எழுதுகையில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பிரபல இணைய ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் இச்செய்தின் உண்மைத்தன்யை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது. அதன் பிரகாரம் இந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என சம்மாந்துறை பொலிஸ் […]
சம்மாந்துறைக்கென புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்.
ஒவ்வொரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் கீழ் மாவட்ட பொலீஸ் பிரிவு காணப்படும். அந்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவானது கல்முனை உதவி மாவட்ட காரியாலயத்தின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது. இதனை தொடர்ந்து அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் பின் தற்போது சம்மாந்துறையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரி காரியாலயம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. செனவிரட்ன அவர்களின் தலைமையில் நேற்று […]
உலர் உணவு பொருட்கள் வழங்கல்
சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்று 2018.05.18 ம் திகதி ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் (பொதிகள்) வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் பாலிப்பானாக… ஆமீன் .