Site icon Sammanthurai

சமூக சேவை அமைப்புகளின் ஒன்றுகூடல்

சம்மாந்துறையில் இயங்கும் சகல,
சமூக சேவை அமைப்புகளுக்குமான
பொது அறிவித்தல்.

அன்புடையீர்,

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அச் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களையும் அவர்கள் ஒன்றிணைந்த அமைப்புகளையும் சாரும். அவ்வாறான சமூகவியலாளர்களும் அமைப்புகளும் நிறைந்து காணப்படுவது நமதூரின் சிறப்பம்சமாகும். அவ்வாறான சிறப்பம்சம் கொண்ட நமதூரில் எட்டப்பட வேண்டிய முன்னேற்றத்தில் சற்று தாமதம் தென்படுவது உண்மையே !

அவ்வாறாயின் அதன் சமூகவியலாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகின்றது. அந்த வகையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்” ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூக அமைப்புகளினால் ஒன்றிணைந்த மாற்றத்தை நோக்கிய ஒரு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வுன்னத பயணத்தை வலுவுறச்செய்ய உங்களை இச்சம்மேளனத்தின் பங்காளியாக இனம் கண்டு, உங்கள் அமைப்பின் பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றது. அந்தவகையில் எதிர்வரும் 2017.06.04 ம் திகதி இவ்வூரில் உள்ள சகல சமூக சேவை அமைப்புக்கள், சமூகசேவையாளர்கள் அனைவரையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது எனவே உங்கள் அமைப்பில் இருந்து 3 நிர்வாக உறுப்பினர்களை கலந்து கொள்ள செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இடம் : தாருஸ்ஸலாம் வித்தியாலய கேட்போர் கூடம். [சம்மாந்துறை] திகதி : 2017.06.04 – காலை 09:00 மனிக்கு.

இவ்வண்ணம்

தலைவர் / செயலாளர்
சம்மாந்துறை பிரிவு
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்.

நிகழ்வன :

1. வரவுப்பதிவு.
2. மார்க்க அனுஷ்டானம்.
3. வரவேட்புரை.
4. நோக்கம் பற்றிய விளக்கம்.
5. சம்மேளனக்கட்டமைப்பு பற்றிய விளக்கம்.
6. சமூக சேவை அமைப்புக்களின் இயலுமை விருத்தி சம்மந்தமாக முன்னெடுக்கப்பட உள்ள வேலைத்திட்டங்களுக்கான அறிமுகம்.
7. நிர்வாகம் / உப குழுக்களுக்கான அங்கத்தவர் இணைத்தல்.
8. சிறப்புரை.
9. கருத்துக்கள் முன்வைத்தல்.
10. நன்றி உரை.

Exit mobile version