News

சம்மாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம்

பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தீர்மானித்துள்ளது.

எனவே சமூக உணர்வுள்ள அனைத்து மக்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் சகல சமூக சேவை அமைப்புக்களும் உங்களது கண்டன பதாதைகளை கொண்டு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் சகல அமைப்புக்களும் உங்களது கண்டன அறிக்கையினை அன்றைய தினம் பிரதேச செயலாளரிடம் கையளிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *